Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்: விஷால் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (21:17 IST)
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படபிடிப்புகள் நடக்காது என அறிவித்துள்ளார். 
 
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது கேளிக்கை வரி உயர்த்தப்பட்டது. இதனால் டிக்கெட் விலை அதிகமாகியது. அதனை அடுத்து தமிழக அரசு சினிமாவிற்கு விதிக்கும் வரியை குறைக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
 
பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் கடந்த 8 நாட்களாக எந்த புதிய படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறது.
 
திரையரங்குகள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அதே தினத்தில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளது. இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வெளியிட்டுள்ளார். 
 
அதன்படி மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காது, சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடக்காது. போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடக்காது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments