Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: பிரபல நடிகர்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கினர்

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: பிரபல நடிகர்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கினர்
, சனி, 28 நவம்பர் 2015 (15:02 IST)
தமிழகத்தின் வெள்ள நிவாரணத்துக்கு  நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி ஆகியோர் 35 லட்சம் ரூபாயம் நிதியுதவி அளித்துள்ளனர்


 
 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை கடந்த நான்கு ஆண்டுகள் கழித்து இந்த வருடம் அதிகமாக மழை பெய்துள்ளது.  சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பெய்த கனமழையால் பலர் உயிரிழந்துள்ளார்கள், பல பகுதிகளில் வெள்ளத்தால் பதிக்கப்பட்டு வீடு, உடமைகள் இழந்து சமூக கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கடுமையாகப் பாதிப்புக்கு ஆளானர்கள்.
 
இதுவரை வெள்ள நிவாரண நிதி வழங்க தமிழக நடிகர்கள்  தரப்பில் எவ்வித அறிவிப்புகளும் வரவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் வெள்ள நிவாரண நிதி வழங்க முன்வந்துள்ளனர். சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து 25 லட்சம் ரூபாயும், விஷால் 10 லட்ச ரூபாயும் நடிகர் சங்கத்துக்கு அளித்துள்ளார்கள். இந்த தொகையை விரைவில் நடிகர் சங்கம் மூலமாக தமிழக முதலமைச்சரின் மழை நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil