Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ரத்து: எத்தனை நாட்களுக்கு?

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (08:09 IST)
இன்று முதல் சென்னை கடற்கரை  மற்றும் தாம்பரம் இடையே செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
சென்னையின் முக்கிய போக்குவரத்தாக விளங்கி வரும் மின்சார ரயில் தான் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர் . ஆனால் அதே நேரத்தில் மின்சார ரயில் போக்குவரத்து அவ்வப்போது பராமரிப்பு காரணமாக சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரை தாம்பரம் இடையே செல்லும்  ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
 
பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறு மார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments