சட்டையே போடாம வந்து ஆட்டைய போட்ட திருடன்! – நகைக்கடை சிசிடிவி காட்சிகள்!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (11:06 IST)
தாம்பரம் அருகே உள்ள நகைக்கடையில் நடந்த கொள்ளை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வந்த ப்ளூஸ்டோன் என்ற நகைக்கடையில் நேற்று புகுந்த கொள்ளையன் ஒருவன் அங்கு ஷோ கேஸில் வைத்திருந்த தங்க, வைர நகைகளை திருடியுள்ளான். மேலும் லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தப்பியுள்ளான்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸார் உடனடியாக சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து சில மணி நேரத்தில் கொள்ளையடித்த வடமாநில இளைஞரை டீசர்ட்டை அடையாளமாக வைத்து கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்து அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டையை கழற்றி முகத்தை மறைத்து கொண்டு இளைஞர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments