Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (12:03 IST)
சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
நிவர் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே அதிதீவிவ புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.    
 
இந்நிலையில் தற்போது மழையின் காரணமாக 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். இதனிடையே எதிர்ப்பார்த்தப்படியே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி இப்போது திறக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே ஏற்கனவே டையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. தற்போது சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் செம்பரம்பாக்கத்தில் இருந்து நீர் திறக்கப்பட்டால் முடிச்சூரில் வெள்ளப்பெருக்கு அதிகமாகும் வாய்ப்புள்ளதாக மக்கள் பாதிகாப்பாக இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments