தையல் ஆசிரியை தற்கொலை: மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (18:13 IST)
அரசு பள்ளியில் பணிபுரிந்த தையல் ஆசிரியை திடீரென தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்ற பகுதியில் அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியை நாகேஸ்வரி என்பவர் பணி செய்து வந்தார். அவரை தலைமை ஆசிரியரும் பணியாற்ற அனுமதிக்காமல் பல மணி நேரம் காக்க வைத்து வைத்து திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது 
 
மேலும் பல்வேறு வகையில் டார்ச்சர் செய்ததால் மன உளைச்சல் அடைந்த தையலாசிரியர் நாகேஸ்வரி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பள்ளிக்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் 
 
இதனை அடுத்து தலைமை ஆசிரியையை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்த பின்னரே உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments