Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடாவடி, கெடுபிடி, உடும்புபிடி, இரும்புபிடி: ஆர்ப்பாட்டத்தில் அசத்திய டி.ஆர்.

அடாவடி, கெடுபிடி, உடும்புபிடி, இரும்புபிடி: ஆர்ப்பாட்டத்தில் அசத்திய டி.ஆர்.
, புதன், 7 செப்டம்பர் 2016 (15:15 IST)
இலட்சிய திமுக சார்பாக வடசென்னையில் காவிரி பிரச்சனை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட டி.ராஜேந்தர் மேடைகளில் பேசுவது போலவே அசத்தினார்.


 

 
மத்திய அரசை கண்டித்து டி.ராஜேந்தர் வடசென்னையில் இலட்சிய திமுக சார்பாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டார். அதில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
 
பாலாற்று குறுக்கே அணை கட்டுவோம் ஆந்திரா என்று செய்கிறது அடாவடி. சிறுவாணி நதியை தடுத்து அணை கட்டுவோம் என்று கேரளா கொடுக்கிறது கெடுபிடி. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று கர்நாடகா கொடுக்கிறது கசையடி.
 
ஆனால் தமிழ்நாட்டு உரிமையை விட்டு தர மாட்டோம் என்று தமிழக முதல்வர் உறிதியாக பிடிக்கிறார் உடும்புபிடி. அது அசைக்க முடியாத இரும்புபிடி. 
 
மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் மீது ஏன் இந்த வெறுப்பு. தமிழ்நாடு என்ன பக்கத்து நாடு பாகிஸ்தானா? இல்ல பங்களாதேஷா? எங்களுக்கு ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்?
 
மத்திய அரசே கண்டும் காணாமல் நடக்காதே. தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே, என்று கூறினார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாகரன் நல்லவர் வல்லவர்: இலங்கை ராணுவ தளபதி புகழாரம்