Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரிவாக்கம்.. ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு..!

தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரிவாக்கம்.. ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு..!
, வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (10:48 IST)
சென்னை தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில்  விரிவாக்கம் செய்ய 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனைக் குழுதலைவராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.
 
அவருக்கு திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
 
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சேகர் ரெட்டி, ‘தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு நடைபாதையாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூர் - திருப்பதி, பெரியபாளையம் -திருப்பதிசாலையில் தங்கும் சத்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் தி.நகர் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அதற்காக ரூ.19 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதன் பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதற்காக அண்டை மாநிலங்களில் நீர்ப்பிச்சை எடுக்க வேண்டும்? சுரேஷ் காமாட்சி ஆவேசம்..!