Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலையாளி கைது?; ரகசிய இடத்தில் விசாரணை?: மறைக்கும் காவல் துறை?

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (08:46 IST)
நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொலை செய்த அந்த மர்மநபரை காவல் துறை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
நேற்று முன்தினம் சென்னை திருவான்மியூர் அருகே சுவாதியை கொலை செய்தவனை காவல் துறை கைது செய்ததாக செய்திகள் வந்தன. இதனையடுத்து அந்த செய்தி வதந்தி என காவல் துறை மறுத்தது.
 
இந்நிலையில் சுவாதி கொலையாளி திருவான்மியூர் அருகே காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளன் என பரவிய அந்த செய்தி உண்மை தான் என தகவல்கள் வருகின்றன.
 
அந்த கொலையாளியை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறை விசாரித்து வருவதாகவும் பேசப்படுகிறது. விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் கொலையாளி குறித்த தகவல் வெளியிட முடியாது என காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாக தகவல்கள் கசிகின்றன.
 
இந்த கைது சம்பவத்தை திசை திருப்பவதற்காகவே தனிப்படை பெங்களூரூ, மைசூர் போன்ற பகுதிகளில் விசாரணை நடத்திவருவதாக காவல் துறை கூறிவருவதாக பேசப்படுகிறது.
 
கைது செய்யப்பட்ட நபரிடம் முழு விசாரணை நடத்தி, கொலைக்காண பின்னணி குறித்த அனைத்த தகவல்களும் கிடைத்த பின்னர் காவல் துறை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments