Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதியும், பிலால் மாலிக்கும் காதலர்கள்: எவிடென்ஸ் அமைப்பு தகவல்

சுவாதியும், பிலால் மாலிக்கும் காதலர்கள்: எவிடென்ஸ் அமைப்பு தகவல்
, சனி, 16 ஜூலை 2016 (12:03 IST)
மதுரையை மையமாக கொண்டு இயங்கும் எவிடென்ஸ் அமைப்பு சுவாதி கொலை வழக்கில் கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. இந்த அமைப்பின் இயக்குனர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொலை செய்யப்பட்ட சுவாதியும், அவரது ஆண் நண்பருமான பிலால் மாலிக்கும் காதலித்து வந்தார்கள் என கூறியுள்ளார்.


 
 
சுவாதி கொலை வழக்கில் முதன் முதலில் அடிபட்ட பெயர் பிலால் மாலிக். பிலால் மாலிக் என்பவர் தான் கொலை செய்தார் என நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
 
பின்னர் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர்தான் சுவாதியை கொலை செய்தார் என காவல்துறை அறிவித்தது.
 
இந்த வழக்கில் கள ஆய்வு மேற்கொண்ட எவிடென்ஸ் அமைப்பின் இயக்குனர் கூறுகையில் இந்த வழக்கில், ராம்குமார் தான் குற்றவாளி என்பதற்கான போதிய ஆதாரம் காவல்துறையிடம் இல்லை. காவல்துறை ராம்குமார், பிலால் மாலிக் தவிர வேறு எங்கும் விசாரணையை விரிவுபடுத்தாமல் உள்ளனர்.
 
சுவாதியின் நண்பரான பிலால் மாலிக் சுவாதியின் காதலர் என அவர் கூறியுள்ளார். காவல்துறையே அதனை ஒப்புக்கொண்டதாக அவர் கூறுகிறார். சுவாதியும், பிலால் மாலிக்கும் காதலித்து வந்தது அருகில் இருந்த அனைவருக்கும் தெரியும் என கூறும் எவிடென்ஸ் அமைப்பு சுவாதி ரமலான் நோம்பு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் தந்தை கேள்விக்கு பதில் என்ன? : சுவாதி கொலை வழக்கு குறித்து கருணாநிதி கேள்வி