Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியாதிக்காரன் வாந்தியை எம்பியின் பேச்சுடன் ஒப்பிட்ட எஸ்.வி.சேகர்!

வியாதிக்காரன் வாந்தியை எம்பியின் பேச்சுடன் ஒப்பிட்ட எஸ்.வி.சேகர்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (19:09 IST)
வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை நுழைந்தது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்பி அன்வர் ராஜா, சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்த வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும் என கூறினார்.


 
 
வருமான வரித்துறையை சீண்டும் விதமாக அன்வர் ராஜா எம்பி பேசியதற்கு அவரை டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார் எஸ்.வி.சேகர். அவர் தனது டுவிட்டரில் வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேச, இங்கே அன்வர் ராஜா & குழுவினரை அனுகவும் என நக்கலடித்துள்ளார். அன்வர் ராஜாவின் பேச்சை எஸ்.வி.சேகர் வியாதிக்காரன் வாந்தியுடன் ஒப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments