Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கு என அரசியல் கட்சி: எஸ்.வி சேகர் பேட்டி

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (16:35 IST)
தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கு என அரசியல் கட்சி தொடங்கப்படும் என நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் பிராமணர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கட்சி தொடங்கப் போவதாகவும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரி என 33 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் எங்கள் கட்சிக்கு பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்றும் தமிழகத்தில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கை அதன் மூலம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
கட்சி தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது நான் மோடியிடம் சென்று பாஜகவில் இருந்து விலகும் முடிவை அறிவிப்பேன் என்றும் என்னால் இரட்டை குதிரைகளில் பயணம் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments