Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மரணமடையும் முன்னர் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் யார்?

ஜெ. மரணமடையும் முன்னர் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் யார்?

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (16:09 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.


 
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் சசிகலா புஷ்பா.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போதே சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா. ஜெயலலிதாவின் கையெழுத்து முறைகேடாக பயன்படுத்தப்படலாம் என ஆளுநருக்கு கடிதம் எழுதினார். சசிகலாவை நேரடியாக பல விவகாரங்களில் குற்றம் சாட்டி வருகிறார் சசிகலா புஷ்பா.
 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட கூடாது என்பதற்காக பல வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா. இந்நிலையில் சசிகலா புஷ்பா ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது நடந்த சில ரகசியங்களை கூறி வருகிறார்.
 
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோவுக்கு ஒரு மர்ம பெண்மணி வந்து சென்றதாகவும் அவர் ஐதராபாத்தை சேர்ந்தவர் எனவுக் கூறியுள்ளார். இது தொடர்பான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஒப்படைக்க உள்ளதாக அவரது தரப்பில் கூறுகின்றனர்.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments