Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடாத மழையிலும் விடாமல் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (04:29 IST)
ஓசூர் அருகே அடாத மழையிலும் விடாமல் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  சர்வேயர் அக்பர் பாட்ஷாவை போலீசார் கைது செய்தனர்.
 
கர்நாடக மாநிலம், மாலூரை சேர்ந்த லட்சுமி தேவி(38) என்பவருக்கு சொந்தமான நிலம், ஓசூர் அருகே பலவனப்பள்ளி கிராமத்தில் உள்ளது.
 
இந்த நிலத்திற்கு பட்டா கோரி லட்சுமிதேவி, மனு அளித்தார். பட்டா வழங்க வேண்டும் எனில், ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அப்பகுதி சர்வேயர் அக்பர்பாஷா வற்புறுத்தியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க மணம் இல்லாத அந்த பெண்மணி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய பணம் ரூ.30 ஆயிரத்தை சர்வேயர் அக்பர்பா ஷாவிடம், லட்சுமி தேவி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த போலீசார் அக்பர் பாட்ஷாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments