Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் முதல்வர் கனவை உடைத்த தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:54 IST)
முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் அதிமுகவில் உருவாகி தமிழக அரசியல் களத்தை மிகவும் பரபரப்பாக வைத்துள்ளது. முதல்வ பதவி அடைந்தே தீருவது என்ற முனைப்பில் சசிலலா தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதனல் அதிமுக எம்.எல்.ஏ.க்களை கூவாத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.


 

இந்த நிலையில் தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து சசிகலாவின் முதல்வர் கனவு சிதைந்தது என்றே கூறலாம். தண்டனை காலம் 4 ஆண்டுகள் என்பதால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலாவின் முதல்வர் கனவு தவிடுபொடியானது.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கார்டன் வட்டாரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments