Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது! – உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Webdunia
வியாழன், 18 மே 2023 (11:51 IST)
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மாடுபிடி விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.

பின்னர் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை ஏற்படுத்தி தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதை அனுமதித்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.. புதிய நேபாள பிரதமர் சுசீலாவுக்கு மோடி தகவல்..!

குலுங்கியது திருச்சி.. தவெக தொண்டர்கள் உற்சாகம்.. விஜய் வரவால் போக்குவரத்து பாதிப்பு..

உலகின் முதல் ஏஐ அமைச்சர் நியமனம்.. எந்த நாட்டில் தெரியுமா?

தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி.. தங்கம் விலை இன்று சற்று சரிவு..!

உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்: புதின் அறிவிப்பால் டிரம்ப் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments