Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
, வெள்ளி, 20 நவம்பர் 2015 (16:31 IST)
தருமபுரி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 


 
தர்மபுரியில் தேமுதிக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சியியன் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது, அரசு வழக்கறிஞர் அசோகன், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 30ஆம் தேதி தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடர்ந்தார்.
 
இவ்வழக்கில், விஜயகாந்த் வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி சுபாதேவி நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், இவ்வழக்கினை எதிர்த்து, தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா ஸ்ரீபந்த் ஆகியோர் விசாரித்த பின்னர், அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இதுகுறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil