Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் பதிவிட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:34 IST)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்வி சேகர் சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்தை பதிவிட்ட விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
 பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க எஸ்வி சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
 
 கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்வி சேகர் தரப்பு கோரிக்கையையும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
 
குடும்ப பிரச்சனைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால் காணொளி மூலமாக ஆஜராக அனுமதிக்கலாம் என்றும் இந்த வழக்கில் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments