Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:30 IST)
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அந்த தடை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
திமுக பொதுக்குழு தொடர்பான சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் இந்த மனு டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த வழக்கை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு ஓபிஎஸ் சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில் நீதிபதிகள் அதை நிராகரித்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது என்பதும் அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கு அதே நிலையிலேயே தொடர வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது 
தற்போது அந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு பின்னரே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்த விவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments