Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனை விடுவிக்க முடியாது ; நீதிமன்றம் கை விரிப்பு

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (12:49 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை தற்போதைக்கு விடுவிக்க முடியாது என நீதிமன்றம் கை விரித்துவிட்டது.


 
இந்த வழக்கில் கடந்த 26 வருடங்களாக பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அந்நிலையில், அவருக்கு  சமீபத்தில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் தந்தையின் உடல்நலத்தை கனக்கில் கொண்டு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. அதன் பின் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில், தான் பல வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், தான் கொடுத்த வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யாததாலேயே தான் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டு, தன்னை விடுதலை செய்யுமாறு அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வாதங்கள் முடிந்த பின் தீர்ப்பளித்த நீதிபதி, தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது என தீர்ப்பளித்தார். மேலும்,சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்கு அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments