Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரிலிருந்து துணை ராணுவம் சென்னை வருகை

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (14:22 IST)
தமிழகத்துக்கு பாதுகாப்பு படை அனுப்பி உதவ தயாராக இருப்பதாக உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு சற்றுமுன் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தற்போது பெங்களூரிலிருந்து மாலை 4 மணிக்கு துணை ராணுவம் சென்னை வருகிறது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமக உள்ளது. இதனால் அப்பல்லோ மருத்துவமனைக்கு காலை முதல் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சூழ்நிலையை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ராஜிஜு, தமிழக அரசு விரும்பினால் மத்திய அரசு பாதுகாப்பு படைகளை அனுப்பி உதவ தயாராக உள்ளது. தமிழக அரசு கேட்காமல், மத்திய அரசு தானாக படைகளை அனுப்பாது என்று தெரிவித்தார்.
 
அதைத்தொடர்ந்து சட்ட ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது என்று ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தெரிவித்தார். இந்நிலையில்  தற்போது பெங்களூரிலிருந்து மாலை 4 மணிக்கு துணை ராணுவம் சென்னை வருகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

Union Budget 2025-26 Live: மத்திய பட்ஜெட் 2025-26 நேரலை!

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments