Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல்: ரூ.2 கோடி நிதி வழங்கிய சன் குழுமம்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (19:47 IST)
கடந்த 10 - 12 நாட்களுக்கு முன்னர் தமிழக டெல்டா பகுதிகளை கஜா புயல் கடுமையாக தாக்கிய நிலையில், இன்னும் சீரமைப்பு பணிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. 
 
கடந்த 15 ஆம் தேதி இரவு தமிழகத்தில் கஜா புயல் கரையை கடந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பாதிப்புகளை சீரமைக்க பலர் நிதி அளித்து வருகின்ரனர். இதில், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் ஆகியோர் அடக்கம். அந்த வகையில் இன்று சன் குழுமம் கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.2 கோடி நிதி அளித்தது. 
 
இந்த ரூ.2 கோடி நிவாரண நிதியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக சென்று சன் குழும நிர்வாகிகள் வழங்கினர். டெல்டா மாவட்டங்களின் பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில் ரூ. 200 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments