Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"கஷ்டப்படுவான் என்பதால் அவனையும் அழைத்துச் செல்கிறேன்" - மகனை ஏரியில் வீசிக் கொன்று தாயும் தற்கொலை

, திங்கள், 24 நவம்பர் 2014 (12:30 IST)
7 வயது மகனை ஏரியில் வீசிக்  கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கடிதத்தைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்
 
சென்னை அடுத்த அம்பத்தூர் லெனின் நகரைச் சேர்ந்தவர் நித்யா. இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபுவிற்கும் 7ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிவடைந்தது. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு 6 வயது குழந்தை ஒன்று உள்ளது.
 
இவர் பொறியியல் முடித்து சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று  பகல் 2 மணியளவில் தனது மகனை அழைத்துக் கொண்டு புழல் ஏரிக்கு வந்துள்ளார். முதலில் தனது 7 வயது மகனை ஏரியில் வீசியுள்ளார். பின்னர் தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
 
தகவல் அறிந்து வந்த காவல் துறையினரும் மற்றும் தீயணைப்புத் துறையினரும் இருவரது உடல்களை தேடினார்கள். நேற்று மாலை சிறுவனது உடலை மட்டும் கைப்பற்றியுள்ளனர். நித்யாவின் உடலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 
நித்யாவின் இருசக்கர வாகனத்தில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் நித்யா "எனது வாழ்க்கையில் ஏகப்பட்டப் பிரச்சினைகள். ஆகவே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். மன உளைச்சல் கொடுத்தக் கடவுளிடம் சென்று கேட்கப் போகிறேன். மகனை விட்டுச் சென்றால் கஷ்டப்படுவான் என்பதால் அவனையும் அழைத்துச் செல்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil