Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினர் திடீர் கைது - கொடிக்கம்பம் அருகே அனுமதியின்றி கூடியதால் போலீஸார் நடவடிக்கை!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (14:17 IST)
கோவையில் கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் அனுமதியின்றி கூடியதாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் பாஜக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு இன்று காலை மாவட்ட தலைவர் பாலாகி உத்தம ராமசாமி தலைமையில் கூடிய பாஜகவினர், கொடியேற்றுவதாக கூறி புதிய கொடிக்கம்பத்தை நட முயற்சித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், புதிய கொடிக்கம்பம் அமைக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்

இதனால் பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி கூட்டம் கூடியதாக கூறி, மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, உட்பட பாஜகவினர் 57 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments