Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் பதவிக்கு ஓ.பி.எஸ். அருகதையற்றவர்; சசிகலாதான் சரி: நவநீத கிருஷ்ணன்

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (23:20 IST)
மிரட்டப்பட்டதாக கூறும் நபர் முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியிருக்கிறார். எனவே சசிகலாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

இது குறித்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நவநீத கிருஷ்ணன், ”சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு எதிராக பன்னீர் செல்வம் சதி செய்கிறார். தான் மிரட்டப்பட்டதாக தவறான தகவலை பன்னீர் செல்வம் பரப்புகிறார்.

தான் மிரட்டப்பட்டதாக கூறும் நபர் முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர் என்று சுப்பிரமணியன் சாமி கூறியிருக்கிறார். எனவே, காலங்கடத்தாமல் சசிகலாவை முதலமைச்சர் பதவியேற்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சசிகலாவிற்கு உரிமை உண்டு. மீண்டும் பொதுக்குழு, தேர்தல் என கூறுவது தவறு” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments