Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் ஒரு 420: சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (18:38 IST)
நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் வழக்கத்தைவிட வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை சீண்டியுள்ளார்.
 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து வருகிறார். பலமுறை ரஜினியை மிகவும் கடினமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சுப்பிரமணியன் சுவாமி ரசிக்கவுமில்லை, விரும்பவுமில்லை.
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியையும், அவரது ரசிகர்களையும் மீண்டும் சீண்டியுள்ளார். ரஜினியின் ரசிகர்கள் இணையத்தில் அதிக தீவிரத்துடன் செயல்படுகின்றனர்.

 
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, எத்தனை பேர் ரஜினிகாந்த் 420-இன் இணைய தன்னார்வ தொண்டர் படையில் சேர்ந்தீர்கள்? குறைவாகத்தான் இருக்கும் என நான் நம்புகிறேன் என பதிவிட்டு ரஜினியையும், அவரது தொண்டர்களையும் மீண்டும் சீண்டியுள்ளார். இதனையடுத்து அவரது பதிவில் ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments