Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக ஆட்சியில் ஊழல் அமோகமாக நடந்து வருகிறது- சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

அதிமுக ஆட்சியில் ஊழல் அமோகமாக நடந்து வருகிறது- சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
, சனி, 5 செப்டம்பர் 2015 (16:14 IST)
அதிமுக ஆட்சியில் ஊழல் அமோகமாக நடந்து வருகிறது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னை, கோயம்பேட்டிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள். தற்போது திமுகவுக்கு போட்டியாக அதிமுக ஆட்சியிலும் ஊழல் அமோகமாக நடந்து வருகிறது என்று கூறினார்.

மேலும் அவர் கூறியபோது, அதிமுக, திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் மூன்றாவது சக்தியைதான் மக்கள் ஏற்பார்கள் என்றார். கூட்டணி அமைக்கச் செய்ய முயற்சி செய்து இந்த சந்திப்பு நடந்ததா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி கூட்டணிகள் குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil