Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறுக்கிகள் யார்? விவரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

பொறுக்கிகள் யார்? விவரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

பொறுக்கிகள் யார்? விவரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!
, புதன், 25 ஜனவரி 2017 (09:22 IST)
சமீப நாட்களில் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தமிழகத்தில் எதிரலை பலமாக வீசுகிறது. தொடர்ந்து தமிழர்களை பொறுக்கிகள் எனவும் போராட்டக்காரகளை நக்சல்கள், ஜிகாதிகள் என சீண்டும் விதமாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக இளைஞர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.


 
 
சுப்பிரமணியன் சுவாமி கூறும் கருத்துக்களால் தமிழக பாஜக கூட பதில் கூற முடியாமல் கையை பிசைகிறது. எத்தனை முறை தான் அது அவருடைய தனிப்பட்ட கருத்து என கூறி சமாளிக்க முடியும். சுவாமிக்கு கடிவாளம் போடுவது யார் என தெரியாமல் முழிக்கின்றனர்.
 
இதனால் நாளுக்கு நாள் அவரது தரம்குறைந்த விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. பாஜக தலைமையை இதனை அமைதையாக பார்த்து ரசித்து வருகிறது. அவரை கண்டிக்கவும் இல்லை.
 
தொடர்ந்து தமிழர்களை பொறுக்கிகள் என கூறும் சுப்பிரமணியன் சுவாமி தற்போது பொறுக்கிகள் எப்படிப்பட்டவர்கள் என டுவிட்டரில் விளக்கியுள்ளார். அதாவது பொறுக்கிகள் அரைகுறை அல்லது முழுமையாக படிப்பறிவில்லாதவர்கள் இதில் ஆண், பெண் இருவரும் அடக்கம். மோசமான வார்த்தைகளால் பேசுவார்கள் அல்லது டுவீட் செய்வார்கள். வன்முறையாக மிரட்டுவார்கள் பின்னர் ஓடிவிடுவார்கள் என கூறியுள்ளார்.

 
இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவில் தமிழ் இணையதள வாசிகள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். தொடர்ந்து தமிழர்களுடன் மோதல் போக்கில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி பாஜகவினர் யாரும் அறிவுரை வழங்காமல் இதனை தொடர விட்டிருப்பது நல்லதல்ல. பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒருவர் இப்படி நடந்துகொள்வதால் மக்களுக்கு அவர் மீதும் அவர் சார்ந்த கட்சி மீது வெறுப்பு உருவாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களை அடிக்க போலிஸை அனுப்பியது இவர் தான்: சுப்பிரமணியன் சுவாமி!