Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸ் அராஜகம்: மாணவர்களை விரட்டி விரட்டி தடியடி!!

போலீஸ் அராஜகம்: மாணவர்களை விரட்டி விரட்டி தடியடி!!
, திங்கள், 23 ஜனவரி 2017 (13:30 IST)
அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


 
 
இதன் மூலம், ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். 
 
வரும் பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று, போராடிய மக்கள் கலைந்து செல்லலாம் என்று  ஊர் கமிட்டியினர் தெரிவித்தனர். 
 
இந்த தகவல் போராட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் போரட்டத்தை கைவிட மறுத்துள்ளனர். அலங்காநல்லூரிலும், நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், காவல் ஆணையருக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் 2 மணி நேரம் லத்தி சார்ஜ் செய்து போரட்டகாரர்களை கலைக்க அனுமதி வழங்கியுள்ளார். இதனால், போலீசார் தடியடி நடத்தி வருகிறார்கள்.
 
இதனால் போலீசார் போராட்டகாரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இது அலங்காநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் விஜயபாஸ்கரின் அவசரத்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் பலி!