Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிம்பு வீட்டு முன்பு மாணவர்கள் திடீர் போராட்டம்

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2015 (23:47 IST)
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் பாடிய நடிகர் சிம்பு வீட்டு முன்பு மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் பாடிய நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் கோரிக்கைவிடுத்த வண்னம் உள்ளனர்.
 
மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இசையமைத்து திரைப்ட பாடல் பாடிய நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீடு முன்பு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் நடிகர் சிம்புவை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.
 
இதனையடுத்து, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் பாடிய நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக போலீசார் தீவீரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.  

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

Show comments