Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா சாலையில் மாணவர்கள் மோதல்: பொதுமக்கள் அச்சம்

அண்ணா சாலையில் மாணவர்கள் மோதல்: பொதுமக்கள் அச்சம்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (14:59 IST)
பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் இல்லத்தில் இருந்து, திரு.வி.க. நகர் நோக்கி சென்ற 38 சி மாநகர பேருந்து, அண்ணா சாலை பெரியார் சிலை அருகே சிம்சன் பேருந்து நிறுத்ததில் நின்றது. அந்த பேருந்தில் சில மாணவர்கள் இருந்தனர். 


 


அதே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறுவதற்காக வேறு சில மாணவர்கள் நின்றிருந்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் பேருந்தில் பயணித்த மாணவர்களும், பேருந்தில் ஏற காத்திருந்த மாணவர்களும் அடி- தடியில் இறங்கினார்கள். இந்த மோதலில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பேருந்து கண்ணாடிகளை உடைத்த பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், பிரசாத் (19), ஆறுமுகம் (18), அஜித்குமார் (18), ராஜேஷ் (18), பிரகாஷ் (19), மணிகண்டன் (18), சஞ்சய் (18), ஆருண்ராஜ் (18), இளவரசன் (18) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். தற்போது அந்த மாணவர்கள் புழல் சிறையில் உள்ளனர்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா-மாலத்தீவு ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அதிபர் முய்சு கையெழுத்து..!

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்: மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

சாம்சங் தொழிலாளர்கள் ஸ்டிரைக் முடிந்ததா? தொடர்கிறதா? குழப்பமான தகவல்கள்..!

சென்னையில் நள்ளிரவு முதல் மழை.. தட்பவெப்பம் மாறியதால் மக்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments