Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் முதியவரை தாக்கி ரூ.2,300 திருட்டு; சீரழிந்து வரும் மாணவர் சமுதாயம்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (14:04 IST)
முதியவரை தாக்கி பணத்தை திருடிச் சென்ற பள்ளி மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி(61). இவர் காளியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரின் எதிரே வந்த மூன்று பள்ளி மாணவர்கள் முதியவரிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர்கள் முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இருப்பினும் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் முதியவரை கத்தியால் குத்திவீட்டு அவரிடமிருந்த இரண்டாயிரத்து முன்னூறு ரூபாயை திருடிச் சென்றனர். படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments