சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: மாணவி வளர்மதி கைது!

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (13:02 IST)
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்ததாக சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் பாய்ந்தது என்பதும் பின்னர் நீதிமன்றம் அவர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலம் வரையிலான 8 வழிச் சாலைக்காக  தங்களின் விவசாய நிலங்களை அழிப்பதை தடுக்ககோரி சேலம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் ஆச்சாங்குட்டப்பட்டி என்ற பகுதியில் 8 வழி சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி வளர்மதி சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து போராடிய மக்களையும் போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
 
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்த வட்டாசியரை எதிர்த்து வளர்மதி உள்பட அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதாகவும், இதனையடுத்து வளர்மதியை வலுக்கட்டாயமாக போலீஸ் இழுத்து சென்று கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதே காரணத்திற்காகத்தான் நேற்று சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments