Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலெக்டரின் கார் மோதி மாணவி படுகாயம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (13:44 IST)
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவின் கார் மோதியதில் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவி படுகாயமடைந்துள்ளார்.

பெரம்பலூர், துறைமங்கலம் அருகே நடுத்தெருவைச் சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி எட் படித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் நேற்று தங்கள் வயலுக்கு சென்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிந்தார். அப்போது எதிரே சர்வீஸ் ரோட்டில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மாணவி கீர்த்திகாவுக்கு தலை, கை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது.

தற்போது அவர் திருச்சி காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கபப்ட்டுள்ளார். மாணவியின் மோதிய கார்  அரியலூர் ஆட்சியர் ரத்னாவின் கார் என்பது தெரியவந்துள்ளது. விபத்தின் போது அந்த காரில் ஆட்சியரின் தாய் மற்றும் தந்தையினர் திருச்சியிலிருந்து அரியலூர் சென்றுள்ளனர். இதையடுத்து ஓட்டுனர் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments