Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியையுடன் ஓடிப்போன மாணவன் செண்டம் எடுத்து அபாரம்

Webdunia
சனி, 23 மே 2015 (15:19 IST)
ஆசிரியையுடனான காதலால் ஓடிப்போன பத்தாம் வகுப்பு மாணவன் கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்.
 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (16) என்ற மாணவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

 
மாணவன் சிவசுப்பிரமணியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை கோதைலட்சுமி என்பவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவன் கடைசித் தேர்வு எழுதி முடித்தக் கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து மாயமாகினர்.
 
தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
 
இதனால் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில், அந்த மாணவன் 500க்கு 452 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments