Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆட்சியை பிடிக்கும் வரை யுத்தம் தொடரும்: ஓ.பி.எஸ்.

ஆட்சியை பிடிக்கும் வரை யுத்தம் தொடரும்: ஓ.பி.எஸ்.
, வியாழன், 16 பிப்ரவரி 2017 (14:21 IST)
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுத்தை அடுத்து, சசிகலா குடும்பம் வசம் கட்சி செல்வதை தடுக்கும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


 

 
இன்று ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து அவரது எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ் அணி தங்கள் பெரும்பான்மையை 15 நாட்களில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 
 
இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சி செல்வதை தடுத்து நிறுத்துவோம். மக்கள் விரும்பும் ஆட்சி தொடரும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும், என்றார்.
 
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் துணை முதலமைச்சர் ஆக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 அடி அகலம்;12 அடி நீள அறை ; பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா - சசிகலா சிறை வாழ்க்கை