Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்: பால் உற்பத்தியாளர் சங்கம்..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (17:55 IST)
நாளை முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பால் உற்பத்தியாளர்களில் சங்கங்களின் கோரிக்கை குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று நடந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது. 
 
மேலும் நாளை முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம் என்று பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதலில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால் நாளை பொது மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments