Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபோதையில் சென்றவர் வெறிநாய் கடித்து பலி

மதுபோதையில் சென்றவர் வெறிநாய் கடித்து பலி
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:09 IST)
மதுபோதையில் சாலையில் சத்தம் போட்டு கொண்டு சென்றவரை தெருநாய்கள் கடித்து குதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாலையோரம் இறந்து கிடந்த உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் நேற்று முன்தினம் இரவு உப்பிலிபாளையம் சாலையில் மதுபோதையில் சுயநினைவு இழந்து தல்லாடிய படி சென்றுள்ளார். அப்பொழுது, அங்கு இருந்த தெருநாய்கள் இவருடைய சத்தத்தை கேட்டு இவரை வெரட்டிக் கொண்டு சென்றுள்ளது. 
 
பின்னர், கை, கால்களில் சதைகள் குதறப்பட்ட நிலையில் மதுபோதையில் இருந்த புகழேந்தி சிங்காநல்லூர் சாலையில் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து சாலையோரம் நடந்து சென்ற ஒருவர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதையடுத்து, அவருடைய உடம்பில் இருக்கும் தலும்பை பார்க்கும் போது வெறிநாய் கடித்து இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil