முடிவுக்கு வருகிறது தெருநாய் தொல்லை!? சென்னையில் நாய் பராமரிப்பு மையம்! - மாநகராட்சி முடிவு!

Prasanth K
வியாழன், 25 செப்டம்பர் 2025 (10:56 IST)

சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்கள் பராமரிப்பு மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 

இந்தியா முழுவதும் கடந்த சில காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சிறுவர்கள், குழந்தைகளை கடிக்கும் நாய்கள், வாகனங்களை துரத்திச் சென்று விபத்துகளையும் ஏற்படுத்துவதால் தெருநாய்கள் எண்ணிக்கையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் அரசின் நடவடிக்கைகளுக்கு நாய் பிரியர்களிடையே எதிர்ப்பு எழுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் சென்னையில் ரேபிஸ் பாதிப்பு, ஆக்கிரமிப்பு குணம் கொண்ட நாய்களை பராமரிப்பு மையத்தில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை வேளச்சேரி மற்றும் மாதவரத்தில் 2 புதிய நாய் பராமரிப்பு மையங்களை ரூ7.67 கோடி செலவில் உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த மையங்களில் 500க்கும் மேற்பட்ட நாய்களை பராமரிக்க முடியும் என கூறப்படுகிறது.

 

இந்த செய்தி வெளியாகியுள்ள நிலையில் நாய்களால் ஏற்படும் விபத்துகள், உயிர் பலிகள் குறைந்தால் போதும் என மக்கள் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments