Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுமுதல் சென்னைக்கு கல்குவாரி குடிநீர்

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (18:44 IST)
கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.


 

 
காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரத்திலுள்ள 22 கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை பயன்படுத்த சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டது. ஆய்வில் நீர் குடிக்க தகுதியுடையது என தெரியவந்தது. இதையடுத்து நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. 
 
அதன்படி செம்பரம்பாக்கம் எரி அருகே உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கல்குவாரி நீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 13 கோடி 63 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நூறு நாட்களுக்கு நாள்தோறும் 3 கோடி லிட்டர் தண்ணீரை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.  
 
மேலும் இன்றுமுதல் சுத்திகரிக்கப்பட்ட கல்குவாரி நீர் சென்னையில் விநியோகம் செய்யப்படுகிறது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments