Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (13:26 IST)
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் தண்டவாளத்தில் பெரிய கல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ரயிலை தடுப்பதற்காக சதி செய்த மர்ம நபர்கள் யார் என்பதைக் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் கிளம்பிய பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பு சந்தை மற்றும் சங்கரன்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய கல், எடையைப் பொறுத்தவரை 10 கிலோவுக்கும் மேல் இருக்கும், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ரயில் டிரைவர் சாமர்த்தியமாக அதை கண்டுபிடித்து ரயிலை நிறுத்தியதால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர், அந்த கல்லை அகற்றிய பின், ரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் உடனடியாக தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை தடுப்பதற்குச் சதி செய்த மர்ம நபர்கள் யார் என்பதற்கான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன், அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான விதத்தில் யாரேனும் சென்றார்களா அல்லது ஏதேனும் வாகனங்கள் வந்ததா? என்பதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.! "மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்" - அன்புமணி ராமதாஸ்.!!

"தமிழக திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்" - பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

கேரள ஏடிஎம்-இல் கொள்ளை.. கண்டெய்னரில் தப்பிய கொள்ளையர்கள்.. மடக்கி பிடித்த தமிழக போலீஸ்..!

நாளை திருமலைக்கு வரும் ஜெகன்மோகன் ரெட்டி.. நிபந்தனை விதித்த தேவஸ்தான அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments