Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (10:13 IST)
ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய தினகரன், ஸ்டெர்லைட் ஆலையும், கூடங்குளம் அணுமின் நிலையமும் தென்மாவட்ட மக்களை அச்சுறுத்தி வருகிறது எனவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு, அங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். மக்களை பாதிக்கும் எந்த திட்டமும் தமிழகத்திற்கு தேவையில்லை என தினகரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments