Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு மட்டும்தான்! – தொடங்கியது சப்ளை!

Webdunia
வியாழன், 13 மே 2021 (08:55 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் இன்று விநியோக பணிகள் தொடங்கியது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடை போக்க தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்ஸிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முதலாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று ஆக்ஸிஜன் விநியோக பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் தமிழக தேவைக்கே மட்டும் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments