Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் நிறைவடைந்த மாநில அளவிலான சீனியர் பேட்மிட்டன் ..திறமையை காட்டிய மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (21:15 IST)
கரூரில் நிறைவடைந்த மாநில அளவிலான சீனியர் பேட்மிட்டன் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கோவை சதீஸ்குமார், இரட்டையர் பிரிவில் கரூர் கணேஷ் நவீன் ஆகிய ஜோடியும், மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த அக்‌ஷ்யா, இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ரம்யா,தனுஸ்ரீ ஆகியோரும் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

கரூர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான சீனியர் இறகு பந்து போட்டிகள் கடந்த 04 தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தப் போட்டிகளில் தமிழத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 550 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவிகளில் போட்டிகள் நடைபெற்றன.

இறுதியாக நடைபெற்ற இறுதிபோட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவையைச் சேர்ந்த சதீஸ்குமார், திருப்பூரை சேர்ந்த சித்தார்த்யை 21-17, 14-21, 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் கரூரை சேர்ந்த கணேஷ் நவீன் ஜோடி 21-13, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் அர்ஜுன் கிருஷ்ணன,மணிகண்டன் ஜோடியை வென்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அக்‌ஷ்யா 22-20 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் மதுரையைச் சேர்ந்த சாருமதியை வென்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில், சென்னை சேர்ந்த ரம்யா ,தனுஸ்ரீ ஜோடி, 21-17, 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை அனுபிரபா,மதுரை ஜெர்லின் அனிகா ஜோடியை வென்றது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில், திருவள்ளுவர் சானியா,செந்தில்வேல் ஜோடி 21-18 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை பாலாஸ்ரீ,தீலிபன் ஜோடியை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments