Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது? கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (08:37 IST)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை. 

 
சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments