10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (10:27 IST)
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 6ல் தொடங்கி மே 30ல் முடிவடையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ல் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 24ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 9 தொடங்கி மே 31 வரை நடைபெறும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும் வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.21 கோடியில் கட்டப்பட்ட வாட்டர் டேங்க்... திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த கொடூரம்..!

அதிமுக கூட்டணியும் ஸ்ட்ராங் ஆயிருச்சு.. திமுக கூட்டணியும் ஸ்ட்ராங்க இருக்குது.. விஜய் பின்வாங்குறது தான் நல்லது..!

இனிமேல் ஒயிட்காலர் ஜாப் உலகம் முழுவதும் கிடையாது.. எச்சரிக்கை விடுத்த பில்கேட்ஸ்..!

அமமுகவுக்கு எவ்வளவு தொகுதி?.. தேர்தலிலிருந்து விலகும் டிடிவி தினகரன்?...

வைத்திலிங்கம் வைத்த டிமாண்ட்!.. திமுகவில் இணைந்ததன் பின்னணி....

அடுத்த கட்டுரையில்
Show comments