Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சுவாதி கொலையால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’ - மகேந்திரன் காட்டம்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (13:41 IST)
சுவாதி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போதே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது தெரிகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தின் தலைநகரமான சென்னை இன்று கொலை நகரமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி பெண் சுவாதி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போதே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது தெரிகிறது.
 
இன்று சென்னையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. அதிக மக்கள் நடமாட்டமுள்ள ரயில் நிலையங்களில் ஒரு கண்காணிப்பு கேமரா இல்லை. ஐ.டி. ஊழியர் சுவாதி கொலையில் அதை தெரிந்து கொண்டே தான் கொலையாளி செயல்பட்டிருக்கிறான்.
 
கண்காணிப்பு கேமரா இருந்திருந்தால் கொலையாளியை எளிதில் பிடித்திருக்கலாம். இனிமேலாவது கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments