Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சுவாதி கொலையால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’ - மகேந்திரன் காட்டம்

’சுவாதி கொலையால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’ - மகேந்திரன் காட்டம்
, செவ்வாய், 28 ஜூன் 2016 (13:41 IST)
சுவாதி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போதே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது தெரிகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தின் தலைநகரமான சென்னை இன்று கொலை நகரமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி பெண் சுவாதி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போதே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது தெரிகிறது.
 
இன்று சென்னையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. அதிக மக்கள் நடமாட்டமுள்ள ரயில் நிலையங்களில் ஒரு கண்காணிப்பு கேமரா இல்லை. ஐ.டி. ஊழியர் சுவாதி கொலையில் அதை தெரிந்து கொண்டே தான் கொலையாளி செயல்பட்டிருக்கிறான்.
 
கண்காணிப்பு கேமரா இருந்திருந்தால் கொலையாளியை எளிதில் பிடித்திருக்கலாம். இனிமேலாவது கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதிக்கு நன்கு தெரிந்தவரே கொலை செய்திருக்க முடியும் : ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா பேட்டி