Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசையில் தொடங்கி கொலையில் முடிந்த கள்ளக்காதல்....

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (15:28 IST)
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் பகுதியில் கள்ளத்தொடர்பு காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் பிரேம்குமார். இவருக்கும் கருப்பாயூரணி பகுதியில் வசித்து வந்த சூர்யா என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
 
சூர்யாவுக்கு ஏற்பகனவே கலியாணம் ஆகி குடும்பம் உள்ள நிலையில் இந்த கள்ளக் காதல் விவகாரத்தை அறிந்த சூர்யாவின் கணவர் பிரகாஷ் தனது சகோதரருடன் சேர்ந்து திட்டம் தீட்டி பிரேம் குமாரை வெட்டிக் கொலை செய்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில்  பிரேம் குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
பிரேம் குமாரை கொலை செய்த குற்றவாளிகளான சூர்யாவின் கணவர் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments