Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செப்டம்பர் 21: குமரியில் நமக்கு நாமே பயணம் தொடக்கம்

செப்டம்பர் 21: குமரியில்  நமக்கு நாமே பயணம் தொடக்கம்
, வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (23:59 IST)
திமுக சார்பில் நமக்கு நாமே என்ற பயணத்தை வரும் 21ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.
 
அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் திரட்டும் வகையில், திமுக சார்பில் தமிழகம் முழுக்க பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
 

 
இதனையடுத்து, தமிழகம் முழுக்க நமக்கு நாமே என்ற பயணத்தை செப்டம்பர் 21ஆம் தேதி கன்னியாகுமரியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இந்த பயணம் 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டு, 234 தொகுதிகளுக்கும் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
 
அப்போது, மக்களின் நீண்ட நாள் பிரச்சினைகள், தீர்கப்படாத குறைகள் போன்றவற்றை முன்வைத்து சிறப்புறையாற்ற உள்ளார். நவம்பர் 8ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இந்த பயணம் நிறைவு பெறுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil